
பரவும் தகவல்
சமீப காலமாக கிரிக்கெட் உலகில் மிகவும் பிரபலமாகி வரும் பெயர் ரிஷப் பண்ட். பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் என அசத்திய ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக வெளியேறியதால் டெல்லி அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். தனது முதல் போட்டியிலேயே தோனியின் சிஎஸ்கே அணியை வீழ்த்தி அசத்தினார். இதனால் இவரை இந்திய அணியின் அடுத்த தோனி என அழைக்கும் கருத்து அதிகரித்துள்ளது.

ரசிகர்கள் அதிர்ச்சி
இந்நிலையில் அதற்கு மாறாக ஒரு கருத்தை தெரிவித்துள்ளார் டெல்லி அணி பயிற்சியாளர் ரிஷப் பண்ட். இதுகுறித்து பேசிய அவர், ஐபிஎல்-ல் ரிஷப் பண்ட் குறித்து நாம் அனைவரும் தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய யுக்தியானது அவரின் பேட்டிங் பொஷிசன் தான். ரிஷப் பண்ட் விராட் கோலி, கேன் வில்லியம்சனை போன்றவர்ன். அவரை முடிந்த அளவிற்கு முன்கூட்டியே களத்திற்கு அனுப்ப வேண்டும். அவர் களத்தில் நிலைத்து நிற்கிறார் என்று தெரிந்தால், அந்த போட்டியில் வெற்றி பெற்றுவிடப்போகிறோம் என்று அர்த்தமாகும்.

ஏமாற்றம்
பண்ட்-ன் ஃபிட்னஸ் குறித்து பேசிய அவர், கடந்த ஆண்டு அவர் லாக்டவுனால் உடல் எடை அதிகரித்து வந்தது ஏமாற்றமளித்தது. அவர் 3 - 4வது போட்டியில் மீண்டும் ஃபார்முக்கு வந்த போதும், நாங்கள் எதிர்பார்த்ததை கொடுக்க முடியவில்லை. ஆனால் அவர் தற்போது முழு ஃபார்மில் இருக்கிறார். டெல்லி அணிக்காகவும், இந்திய அணிக்காகவும் அவர் ஒரு வின்னிங் ப்ளேயராக இருப்பார்.

இடம் பிடிச்சாச்சு
ரிஷப் பண்ட்-ன் கீப்பிங்கில் எப்போதுமே ஒரு கேள்வி எழுந்து வருகிறது. அவர் கீப்பிங் மற்றும் பேட்டிங்கை மேம்படுத்த கடின உழைப்பை போட்டுள்ளார். இங்கிலாந்து தொடரில் அவரின் சிறப்பான கீப்பை பார்த்தேன். அவரால் முடிந்த வரை தேறி வருகிறார். இவர் இதே செயல்பாட்டை தொடர்ந்து வந்தால் இந்திய அணிக்கு விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேனாக அடுத்த 10 - 12 வருடத்திற்கு நிச்சயம் இருப்பார் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











