ஏலம் எடுத்த ஆர்சிபி
ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் இந்தாண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வருகிறார். அவரை அந்த அணி ரூ.14.25 கோடிக்கு ஏலத்தில் எடுத்திருந்தது. பலரும் மேக்ஸ்வெல் கடந்தாண்டு சொதப்பினார் என்று கூறிய போதும் அந்த அணி அதிக தொகை கொடுத்து எடுத்தது.
அணி தொப்பி
இந்நிலையில் ஆர்சிபி அணி தன்னை ஏலம் எடுத்தபோது நடந்த சுவாரஸ்ய நிகழ்வு குறித்து மேக்ஸ்வெல் பகிர்ந்துள்ளார். அதில், ஐபிஎல் ஏலத்தின் போது நானும், ஆர்சிபி அணியில் ஏற்கனவே இருந்த ஆடம் சாப்பாவும் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தின் இருந்தோம். அப்போது நான் ஏலம் எடுக்கப்பட்டேன் என்ற செய்தி வந்ததும் சாம்பா அவரின் பையில் இருந்த ஆர்சிபி தொப்பியை என்னிடம் கொடுத்து அணியில் சேர்த்தார்.
விராட் கோலி
அதோடு நில்லாமல் ஒரு புகைப்படத்தையும் எடுத்த சாம்பா, அதனை ஆர்சிபி கேப்டன் விராட் கோலிக்கு அனுப்பி வைத்து, நான் ஏற்கனவே முதல் ஆளாக மேக்ஸ்வெல்லுக்கு தொப்பியை கொடுத்து வரவேற்றுவிட்டேன் என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த விராட் கோலி சிரித்துக்கொண்டே 'முட்டாள்கள்' நகைச்சுவையாக தெரிவித்தார்.
கோலியின் விருப்பம்
மேலும் பெங்களூரு அணியில் இணைவது ஏற்கனவே தெரியும் எனவும் மேக்ஸ்வெல் தெரிவித்தார். அதில் அவர், இந்திய அணி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தின் போது நானும் கோலியும் மெசேஜ் செய்துகொண்டோம். அப்போது கோலி என்னிடம் "நாங்கள் உங்களை அணியில் சேர்க்க ஆசைப்படுகிறோம். இருந்தாலும் ஏலம் இருக்கிறது. என்ன ஆகிறது என பார்ப்போம் என்றார் என மேக்ஸ்வெல் கூறியுள்ளார்.