சிறப்பான ஓப்பனிங்
அதற்கேற்றார் போலவே ஆர்சிபி அணியின் தொடக்கமும் அதிரடியாக இருந்தது. ஓப்பனிங் வீரர்கள் கோலி மற்றும் தேவ்தத் பட்டிக்கல் ஆகியோர் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்களை பறக்கவிட்டனர். இவர்கள் இருவரின் அதிரடியால் பவர்ப்ளேவின் முடிவில் அந்த அணி 55 ரன்களை குவித்தது. இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தலைவலி ஏற்பட்டது.
சிறந்த பார்ட்னர்ஷிப்
குறிப்பாக தேவ்தத் பட்டிக்கல் யாராலும் தடுக்க முடியாதவாறு ருத்ரதாண்டவம் ஆடினார். 8வது ஓவரில் கேட்ச் அவுட் ஆன போதும், அதிர்ஷ்டவசமாக தப்பினார். இதனால் ஸ்கோர் எகிறப்போகிறது என அனைவரும் நினைத்தனர். இந்நிலையில் ஆர்சிபி அணிக்கு எமனாக களமிறங்கினார் மொய்சஸ் ஹென்ரிக்யூஸ். அவர் வீச வந்த முதல் ஓவரிலேயே விராட் கோலி போல்ட் அவுட்டானார். 24 பந்துகளை சந்தித்திருந்த கோலி 25 ரன்களை சேர்த்திருந்தார்.
Recommended Video
அடுத்தடுத்து 2 விக்கெட்
கோலி அவுட்டான அடுத்த பந்திலேயே ஆர்சிபிக்கு மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. முதல் விக்கெட்டிற்காக ஆல்ரவுண்டர் டேன் கிறிஸ்டியன் களமிறக்கப்பட்டார். இது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் தான் சந்தித்த முதல் பந்திலேயே பவுண்டரி அடிக்க முயல, அந்த பந்து லாவகமாக சர்ஃபராஸ் கானின் கையில் சிக்கியது. இதனால் அடுத்தடுத்த பந்துகளில் 2 விக்கெட்கள் சரிந்தன.
3வது விக்கெட்
இரு விக்கெட்கள் விழுந்தாலும், மறுமுணையில் அதிரடி குறைக்காமல் இருந்தார் தேவ்தத் பட்டிக்கல். ஆனால் அவரின் கதையையும் ஹென்ரிக்யூஸே முடித்துவைத்தார். 12வது ஓவரில் அவர் வீசிய பந்தை தூக்கி அடிக்க முயன்ற பட்டிக்கல் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 38 பந்துகளை சந்தித்த பட்டிக்கல் 40 ரன்களை விளாசினார்.
நீண்ட நாளுக்கு பிறகு
கடந்த சில போட்டிகளாக வெளியில் உட்காரவைக்கப்பட்டிருந்த ஹென்ரிக்யூஸ், முதல் முறையாக இந்த போட்டியில் களமிறக்கப்பட்டார். ஆனால் வந்த முதல் போட்டியிலேயே தனது அபார பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். இந்த 3 விக்கெட்கள் ஆர்சிபி அணிக்கு மிகப்பெரும் பின்னடைவை உண்டாக்கியது. ஆனால் டிவில்லியர்ஸ் மற்றும் மேக்ஸ்வெல் காப்பாற்றி வருகின்றனர்.