எப்படி
இந்த போட்டியில் பெங்களூர் அணியின் வெற்றிக்கு அந்த அணியின் இளம் இடதுகை ஸ்பின் பவுலர் சபாஸ் அகமது முக்கியமான காரணமாக இருந்தார். நேற்று இரண்டு ஓவர் மட்டுமே வீசிய சபாஸ் அகமது 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதிலும் ஒரே ஓவரில் இவர் 3 விக்கெட் எடுத்தார்.
சிறப்பு
இவர் வீசியது 17வது ஓவரில் பிரைஸ்டோ, மணீஷ் பாண்டே, சமத் ஆகிய மூன்று பேரை அவுட் செய்தார். அந்த ஓவர்தான் பெங்களூர் அணிக்கு பெரிய திருப்பு முனையை கொடுத்தது. அதுவரை ஹைதராபாத் வசம் இருந்த போட்டியை திருப்பி கொண்டு வந்தது சபாஸ் அகமதுதான்.
வாவ்
இடதுகை ஸ்பின் பவுலரான இவர் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர். கடந்த மூன்று வருடங்களாக முதல் தர போட்டிகளில் ஆடி வருகிறார். இவர் பவுலிங் மட்டும் இல்லாமல் டாப் ஆர்டரில் நன்றாக பேட்டிங்கும் செய்ய கூடியவர். நேற்று பெங்களூர் அணிக்கு இவர்தான் ஒன் டவுன் இறங்கினார்.
ஜடேஜா
பேட்டிங், இடது கை ஸ்பின் என்பதால் கண்டிப்பாக வரும் நாட்களில் இவர் ஜடேஜாவிற்கு இந்திய அணியில் மாற்றாக இருப்பார். ஜடேஜா ஸ்டைல் பவுலிங் இவரிடம் உள்ளது. இன்னொரு பக்கம் பேட்டிங்கும் செய்கிறார். ஜடேஜாவிற்கு இந்த டி 20 உலகக் கோப்பைக்கு பின் பெரிதாக வாய்ப்பு கிடைக்காது.
வாய்ப்பு
ஜடேஜாவிற்கு மாற்றாக ஒரு வீரரை இந்திய அணி கண்டுபிடிக்க வேண்டும். 26 வயதே ஆன சபாஸ் அகமது ஜடேஜாவிற்கு நல்ல மாற்றாக எதிர்காலத்தில் இருப்பார். இரண்டு மூன்று வருடங்களில் இந்திய அணியில் கோலியின் கண்டுபிடிப்பான சபாஸ் அகமது கண்டிப்பாக கோலோச்ச வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.