
ரஹானே நீக்கம்
அஜின்க்யா ரஹானே 2018 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை பிளே-ஆஃப் வரை எடுத்துச் சென்றார். ஆனால், அவரை அடுத்த ஐபிஎல் தொடரில் பாதியில் கேப்டன் பதவியில் இருந்து நீக்கியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பதவியில் அமர வைக்கப்பட்டார்.

ஸ்டீவ் ஸ்மித் கேப்டன்சி
2020 ஐபிஎல் தொடருக்கு முன் அதிருப்தியில் இருந்த ரஹானே அணி மாறி டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு சென்றார். ஸ்டீவ் ஸ்மித் கேப்டனாக தொடர்ந்தார். ஆனால், அந்த சீசனில் 14 போட்டிகளில் ஆறு வெற்றிகள் மட்டுமே பெற்றது ராஜஸ்தான் அணி.

ஸ்மித் செயல்பாடு
ஸ்டீவ் ஸ்மித் 14 போட்டிகளில் 311 ரன்கள் எடுத்தார். அவரது சராசரி 25.91. ஸ்ட்ரைக் ரேட் 131.22. தொடரின் துவக்கத்தில் அதிரடியாக ஆடிய அவர் இடையே மோசமாக ஆட்டமிழந்து வந்தார். அவர் கேப்டன் என்பதால் அவரை நீக்கவும் முடியவில்லை.

நீக்கம்
மேலும், வெளிநாட்டு வீரர் என்பதால் நான்கு வெளிநாட்டு வீரர்களுக்கான இடத்தில் ஒன்று அவருக்கு ஒதுக்கப்பட வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. இந்த சிக்கல்களை கருத்தில் கொண்டும், அவரது பார்மை கருத்தில் கொண்டும் அவரை நீக்க முடிவு செய்தது ராஜஸ்தான் ராயல்ஸ். சஞ்சு சாம்சன் அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் ஏலம்
ஸ்டீவ் ஸ்மித் சமீபத்தில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் ரிஷப் பண்ட்டின் பேட்டிங் கார்டு அடையாளத்தை அழிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அந்த விவகாரத்தால் இந்திய ரசிகர்கள் அவர் மீது கோபத்தில் உள்ளனர். இந்த நிலையில், அவரை 2021 ஐபிஎல் ஏலத்தில் மற்ற அணிகளும் வாங்க ஆர்வம் காட்டாமல் போகலாம்.


Click it and Unblock the Notifications











