ஏலத்தில் 578 வீரர்கள்
இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான வீரர்களை ஏலம் விடுதல் இன்றும் நாளையும் பெங்களூருவில் நடைபெறுகிறது. மொத்தம் 578 வீரர்கள் ஏலம் விடப்படுகின்றனர்.
இதுவரை 18 வீரர்கள்
ஒவ்வொரு அணியிலும் 25 வீரர்கள் இடம்பெறுவர். ஏற்கனவே மொத்தம் 18 வீரர்கள் தங்களது அணிகளால் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
அஸ்வினுக்கு கடும் போட்டி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கேப்டன் டோணி, ஜடேஜா, சுரேஷ் ரெய்னா ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். அஸ்வினை சென்னை அணி அதிக விலைக்கு ஏலம் எடுக்க வாய்ப்பிருக்கிறது.
182 பேர் ஏலம்
மேலும் மேற்கு இந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல், பிராவோ, இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், நியூசிலாந்து வீரர் காலின் உள்ளிட்டோரையும் ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவக் கூடும். மொத்தம் 578 வீரர்களில் 182 பேர் மட்டுமே ஏலம் எடுக்கப்படுவர்.