பிக்ஸிங்கில் ஈடுபட்டு சிக்கிய 4 வீரர்கள்
ஐபிஎல் பிக்சிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஸ்ரீசாந்த், அஜித் சான்டிலா, அங்கீத் சவான், அமித் சிங் ஆகியோர் சிக்கி சிறைக்குப் போய் வந்தனர்.
விசாரணை ஆணையம்
இந்த 4 பேர் மீதான வழக்கு ஒருபுறம் நடந்து வந்தாலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ரவி சவானி தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்தது.
விசாரணையில் நிரூபணம்
இந்த ஆணைய விசாரணையின் போது 4 வீரர்களுமே ஸ்பாட் பிக்சிங்கில் ஈடுபட்டிருப்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
5 ஆண்டுகால தடைக்கு பரிந்துரை
அத்துடன் பிக்சிங்கில் ஈடுபட்ட 4 வீரர்களுக்கு 5 ஆண்டுகாலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கவும் விசாரணை ஆணையம் பரிந்துரைத்துள்ளது.
இன்று ஆலோசனை
இதைத் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் டெல்லியில் இன்று கூடி ஒரு நபர் ஆணையம் அளித்த அறிக்கையை பரிசீலித்து முடிவு செய்ய உள்ளது.