85வது போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 81வது போட்டி நேற்றைய தினம் பேம்போலிம்மின் ஜிஎம்சி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலிடத்தில் உள்ள மும்பை சிட்டி எப்சி மற்றும் 9வது இடத்தில் உள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதிய நிலையில், 2க்கு 1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணி வெற்றி பெற்றுள்ளது.
தவறவிட்ட கேரளா பிளாஸ்டர்ஸ்
முதல் பகுதியில் கோல் அடிக்க கிடைத்த அதிகமான வாய்ப்புகளை கேரளா பிளாஸ்டர்ஸ் அணி தொடர்ந்து தவறவிட்ட நிலையில் 27வது நிமிடத்தில் வின்சென்ட் கோமெசின் கோல் அடிக்கும் வாய்ப்பை மும்பை சிட்டியின் பிபின் சிங் தடுத்தார். இதையடுத்து அந்த அணியின் ஆடம் லீ பாண்ட்ரே 67வது நிமிடத்தில் ஒரு கோலை அடித்தார்.
அணியின் 3 மாற்றங்கள்
நேற்றைய போட்டியில் கேரளா அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. அணியில் பக்காரி கோன், பிரசாந்த் கருத்தடத்குனி, யோன்ட்ரெம்பெம் தெனேசெந்த்ரா ஆகியோர் நேற்றைய போட்டியில் அந்த அணியில் இடம்பெற்றிருந்தனர். ஆயினும் இந்த மாற்றங்கள் அந்த அணியின் வெற்றிக்கு கைக்கொடுக்கவில்லை.
மும்பை சிட்டி அதிரடி
இதேபோல செர்ஜியோ லோபெராவின் மும்பை சிட்டி அணியின் ஆடம் லி பான்டர், விக்னேஷ் தக்ஷிணாமூர்த்தி மற்றும் சி கோடார்ட் ஆகியோர் அந்த அணிக்கு சிறப்பான துவக்கத்தை அளித்தனர். நேற்றைய ஆட்டத்தின் முதல் பகுதி விறுவிறுப்புடன் அமைந்திருந்தது. கோல் அடிக்கும் வாய்ப்புகள், மிஸ் செய்த நிகழ்வுகள், கோல் கீப்பர்களின் சிறப்பான தருணங்கள் ஆகியவை ரசிகர்களுக்கு விருந்து வைத்தன.