சிறந்த வாய்ப்பு
இந்த தொடர் ரிஷப் பன்ட் போன்று அணியில் உள்ள இளம் வீரர்களுக்கு அருமையான வாய்ப்பாகும். அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பன்ட் தமது திறமைகளையும் வெளிப்படுத்த சரியான வாய்ப்பு.
தோனி அனுபவம்
அவரது திறமை பற்றி எங்களுக்கு தெரியும். தோனியின் அனுபவம் ஒரு முக்கிய காரணம் என்றாலும், இளம் வீரர்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல இது ஒரு வாய்ப்பாக அமையும்.
நினைக்க முடியாது
ஸ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே போன்ற வளரும் வீரர்கள் வாய்ப்பை நன்கு பயன்படுத்தி கொள்ள வேண்டும். உலக கோப்பை தோல்வி நினைத்து பார்க்க முடியாது ஒன்று. அந்த தோல்விக்குப்பின் ஒவ்வொரு நாளும் விடியும்போது மிக மோசமானதாக இருந்தது.
மீண்டு வருவது தான்
உலக கோப்பையில் இருந்து மீண்டு தற்போது சிறப்பாக இருக்கிறோம். கிரிக்கெட் விளையாட ஆர்வமாக இருக்கிறோம். இப்போதைக்கு நாங்கள் செய்ய வேண்டியது தோல்வியில் இருந்து மீள்வது தான் என்றார்.