சுருட்டினார் குல்தீப்
டி-20 போட்டியில் கலக்கியதைப் போலவே, குல்தீப் யாதவ் இந்தப் போட்டியிலும் அபாரமாக பந்து வீசினார். 10 ஓவர்களில் 25 ரன்கள் மட்டும் கொடுத்து 6 விக்கெட்களை அவர் வீழ்த்தினார். உமேஷ் யாதவ் 2, யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
தவான் 40 ரன்கள்
269 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா, ஷிகார் தவன் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர். அணியின் ஸ்கோர் 59ஆக இருந்தபோது தவான் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 40 ரன்கள் எடுத்தார்.
கோஹ்லி 75 ரன்கள்
அடுத்து ரோஹித் சர்மாவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் விராட் கோஹ்லி. இருவரும் இணைந்து இங்கிலாந்து பந்துவீச்சை சிதறடித்தனர். 82 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் கோஹ்லி ஆட்டமிழந்தார்.
ரோஹித் தூள் கிளப்பினார்
மறுபுறம் அபாரமாக விளையாடிய ரோஹித் சர்மா ஒருதினப் போட்டிகளில் 18வது சதத்தை அடித்தார். இறுதியில் 59 பந்துகள் மீதமிருக்கையில் 40.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 269 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது. ரோஹித் சர்மா 114 பந்துகளில் 15 பவுண்டரிகள், 4 சிக்சர் உள்பட 137 ரன்களுடனும், கே.எல். ராகுல் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 3 போட்டித் தொடரில் 1-0 என இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.