
கைகளில் இருக்கிறது
ஆனாலும் தற்போது இந்த விவகாரம் பிசிசிஐ குறைதீர்ப்பாளர் மற்றும் நீதி அதிகாரி டிகே ஜெயின் முடிவில்தான் இருக்கிறது. இதனை சிஓஏ குழுவில் புதிதாக இணைந்த லெப்டினண்ட் ஜெனரல் ரவி தோக்டே தெரிவித்தார்.

புகார் எதுவும் இல்லை
அவர் மேலும் கூறியிருப்பதாவது: டிராவிட் விவகாரத்தில் ஆதாயம் தரும் இரட்டைப் பதவி புகார் எதுவும் இல்லை. இனி டிகே ஜெயின் முடிவெடுக்கட்டும் எங்களைக் கேட்டால் நாங்கள் அவருக்கு நற்சான்றிதழ் வழங்கி விட்டோம் என்று தெரிவிப்போம்.

பதில் அளிக்கப்படும்
டிகே ஜெயின் இரட்டைப்பதவி நலன் இருக்கிறது என்றால் நாங்கள் எங்கள் பதிலை அவர்களுக்கு தெரிவிப்போம். அதாவது ஏன் இரட்டைப் பதவி இல்லை என்று பதில் அளிப்போம் என்றார்.

ஊதியமில்லா விடுப்பு
இதுகுறித்து பிசிசிஐ கூறியிருப்பதாவது: தேசிய கிரிக்கெட் அகாடமி பணியில் டிராவிட் அமர்த்தப் பட்ட போது இண்டியா சிமெண்ட்ஸ் பணியை விட வேண்டும் அல்லது விடுப்பில் வர வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதனையடுத்து சம்பளம் இல்லாத விடுப்புக்கு டிராவிட் இண்டியா சிமெண்ட்சிடம் கோரியுள்ளார். ஆகவே ஆதாயம் தரும் இரட்டைப் பதவி விவகாரம் இப்போது இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

திட்டங்கள் உண்டு
தேசிய கிரிக்கெட் அகாடமியை சர்வதேச தரத்துக்கு உயர்த்த டிராவிடுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்துள்ளோம். அவரும் அதற்கான ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அவருடன் சேர்ந்து பணியாற்ற உள்ளோம் எனவும் உறுதி அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











