ஒருநாள் போட்டி துவக்கம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான ஒருநாள் தொடரின் முதல் போட்டி புனேவின் மகாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேஷன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்த நிலையில் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
ரோகித் -ஷிகர்
இந்த போட்டியில் துவக்க வீரர்களாக ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் விளையாடி வருகின்றனர். 13 ஓவர்கள் முடிவில் இருவரும் இணைந்து 50 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை இந்திய அணிக்கு கொடுத்துள்ளனர். ரோகித் சர்மா மற்றும் ஷிகர் இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தை அளித்து வருகின்றனர்.
ரோகித்திற்கு ஒரு சதம் பாக்கி
இந்நிலையில் ஒருநாள் போட்டிகளில் ரிக்கி பாண்டிங்கின் அதிக சதங்கள் சாதனையை பூர்த்தி செய்ய ரோகித் சர்மாவிற்கு இன்னும் ஒரு சதமே மீதமுள்ளது. ஒருநாள் போட்டிகளில் மட்டும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ரிக்கி பாண்டிங் 30 சதங்களை அடித்துள்ளார்.
பாண்டிங் சாதனைக்கு முயற்சி
இந்தளவில் இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா 29 சதங்களை அடித்துள்ளார். இந்நிலையில் இந்த போட்டியில் அல்லது இந்த தொடரில் ரோகித் சர்மா சதத்தை அடிக்கும் நிலையில், ரிக்கி பாண்டிங்கின் சாதனையை சமன் செய்வார். இன்றைய போட்டியில் 13 ஓவர்களின் முடிவில் ரோகித் சர்மா 23 ரன்களை அடித்துள்ள நிலையில், பாண்டிங்கை எட்டி பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.