
பேட்டி கொடுத்த விருத்திமான் சாஹா
விருத்திமான் சாஹா ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறுகையில், "ரிஷப் பந்த் வயதில் இளையவர். நிறைய கற்றுக் கொள்ள வேண்டிய வயது. நான் அவரிடம் எப்போதுமே நிறைய புதிது புதிதாக செய்ய வேண்டும் என்று கூறுவது வழக்கம். விக்கெட் கீப்பராக எப்படி சிறப்பாக செயல்படலாம் என்பது குறித்து அவருக்கு நிறைய ஆலோசனைகள் கூறுவேன். நிச்சயம் எங்களுக்குள் போட்டியே கிடையாது. இருவருமே சூப்பராக பழகுகிறோம் என்று கூறியுள்ளார்.

வங்கதேச தொடரில் பங்கேற்கவில்லை
கடந்த நவம்பர் மாதம் வங்கதேசத்துக்கு எதிரான பகல் -இரவு போட்டியில் சாஹா இடம்பெற முடியவில்லை. அதேபோல நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சாஹா இடம் பெறவில்லை. அப்போட்டியில் நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்நிலையில், தானும் பந்த்தும் ஜாலியாக இருக்கிறோம். ஜோக்கடிக்கிறோம். சேர்ந்து பயிற்சி பெறுகிறோம். நிறையப் பேசுவோம். அவர் நிறைய முயற்சிப்பார் என்று சாஹா கூறியுள்ளார்.

22 வயசு ரிஷப் பந்த்
தற்போது ரிஷப் பந்த்துக்கு 22 வயதுதான் ஆகிறது. அதேசமயம், சாஹாவுக்கு 36 வயதாகப் போகிறது. எனவே பந்த்துக்கு இந்திய அணியில் நிறையவே வாய்ப்புகள் உள்ளன. இதை சாஹாவும் உணர்ந்துள்ளார். எப்போதுமே வாய்ப்புகளை விட அணியின் நலன்தான் முக்கியம். அதை நானும் உணர்ந்துள்ளேன். எனவே வாய்ப்பு கிடைக்கவில்லை என்று வருந்துவதில்லை என்று கூறுகிறார் சாஹா.

அணியின் நலனே முக்கியம்
நாங்கள் அனைவருமே இந்தியாவுக்காகத்தான் ஆடுகிறோம். அணிதான் எது சிறந்தது என்பதை முடிவு செய்கிறது. அதை நாம் மதிக்க வேண்டும். கடந்த தொடரில் ரிஷப் விளையாடவில்லை. ஆனால் நியூசிலாந்து தொடரில் அவர் விளையாடினார். இப்படித்தான் இருக்கும். எல்லோருக்குமே விளையாட வேண்டும் என்று ஆசை இருக்கும். வாய்ப்பு கிடைக்கும்போது அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார் சாஹா.


Click it and Unblock the Notifications











