
ஓப்பனிங் பார்ட்னர்ஷிப்
தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஆட்டத்தின் முதல் ஓவரில் இருந்தே அதிரடியை தொடங்கினர். 85 பந்துகளை சந்தித்த கேப்டன் ரோகித் 101 ரன்களை விளாசினார். மற்றொரு ஓப்பனரான சுப்மன் கில் 78 பந்துகளில் 112 ரன்களை அடித்திருந்தார். இதில் 13 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கும்.

உலக சாதனை படைப்பு
இந்த தொடரில் ஏற்கனவே முதல் போட்டியில் இரட்டை சதம் அடித்திருந்த சுப்மன் கில், 2வது போட்டியில் 40 ரன்களை அடித்திருந்தார். தற்போது 112 ரன்களை அடித்துள்ளதன் மூலம் இரு தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அதிக ரன்களை அடித்தவர் பட்டியலில் பாபர் அசாமை சமன் செய்தார். பாபர் அசாம் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக கடந்த 2016ம் ஆண்டு 360 ரன்களை அடித்தார். தற்போது கில் நியூசிக்கு எதிராக 360 ரன்களை விளாசியுள்ளார்.

தவான் சாதனை
இதுமட்டுமல்லாமல் ஷிகர் தவானின் சாதனையும் முறியடிக்கப்பட்டுள்ளது. அதாவது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 4 சதங்களை அடித்த இந்தியராக ஷிகர் தவான் இருந்தார். அவர் 24 இன்னிங்ஸ்களை இதற்காக எடுத்துக்கொண்டார். ஆனால் சுப்மன் கில் தற்போது 21 இன்னிங்ஸ்களில் 4வது சதத்தை அடித்துவிட்டார்.

இமாலய ஸ்கோர்
இப்படி சாதனையுடன் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைக்க, அதன்பின்னர் வந்த விராட் கோலி 36 ரன்கள், துணைக்கேப்டன் ஹர்திக் பாண்ட்யா 54 ரன்களையும் அடித்தனர். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 9 விக்கெட்களை இழந்து 385 ரன்களை குவித்தது.


Click it and Unblock the Notifications











