For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியா வருகின்றன தென் ஆப்பிரிக்கா, இலங்கை கிரிக்கெட் அணிகள்! பிசிசிஐ அறிவிப்பு

By Veera Kumar

மும்பை: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தாண்டில் 4 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் இவ்வாண்டு இறுதியில் விளையாட உள்ளதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய செயலாளர் அனுராக் தாகூர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்ட், 5 ஒருநாள் கிரிக்கெட், 3 டி20 கிரிக்கெட் போட்டிகளில் ஆட உள்ளது.

மைதானங்கள்

மைதானங்கள்

அகமதாபாத், டெல்லி, நாக்பூர் மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களில் டெஸ்ட் போட்டிகளும், சென்னை, கான்பூர், மத்திய பிரதேசம், ராஜ்கோட் மற்றும் மும்பை ஆகிய நகரங்களில் ஒருநாள் போட்டிகளும் நடைபெற உள்ளன.

டி20 போட்டிகள்

டி20 போட்டிகள்

கொல்கத்தா, மொகாலி மற்றும் தர்மசலா ஆகிய நகரங்களில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. டி20 போட்டிகளை கடைசியில் வைத்துக்கொள்ளவும், டெஸ்ட் தொடரை முதலில் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இலங்கை

இலங்கை

இதேபோல, இலங்கை கிரிக்கெட் அணி, அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து, விசாகப்பட்டிணம், புனே மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில், 3 டி20 போட்டிகளில் ஆட உள்ளது.

உலக கோப்பை

உலக கோப்பை

உலக கோப்பை டி20 போட்டிகள் அடுத்த ஆண்டு மார்ச் 11 முதல் ஏப்ரல் 3ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், அதற்கான பயிற்சியாக இலங்கைக்கு எதிரான போட்டிகளை இந்தியா பார்க்கிறது.

Story first published: Monday, May 25, 2015, 16:15 [IST]
Other articles published on May 25, 2015
English summary
South Africa will tour India later this year to play 4 Tests, 5 ODIs and 3 T20Is, the Board of Control for Cricket in India (BCCI) announced today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X