
கிரிக்கெட்
தொடர்ந்து கிரிக்கெட் சம்பந்தமான நிகழ்ச்சிகளை பார்த்து வரும் மக்களுக்கு சுமந்த சி ராமனை தெரியாமல் இருக்காது. இவரது கிரிக்கெட் விமர்சனங்களுக்கு பலர் பெரிய ரசிகர்கள். அதே சமயம் சமீப காலங்களில் இவர் அரசியல் சம்பந்தமான விவாதங்களில் கூட கலந்து கொண்டு பேசி வருகிறார்.
ஆதரவு இல்லை
முதலில் ஐபிஎல் போட்டி குறித்து பேசிய சுமந்த் சி ராமன் ''நான் இந்த முறை எந்த ஐபிஎல் போட்டியையும் பார்க்க செல்ல மாட்டேன். அதே போல் ஐபிஎல் சம்பந்தமான எந்த விதமான தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள மாட்டேன். காவிரி மேலாண்மை வாரியமோ, அதற்கு இணையான ஒன்றோ அமைக்கப்படும் வரை இதுதான் என் முடிவு. வாழ்க்கையில் விளையாட்டை விட பெரிய விஷயங்கள் சில இருக்கிறது. இதுதான் விவசாயிகளுடன் நிற்பதற்கு சரியான நேரம்'' என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

வரவேற்பு
இது பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. பொதுவாக சுமந்த் சி ராமன் பாஜக கட்சிக்கு ஆதரவாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசக்கூடியவர். ஆனால் இந்த முறை பாஜக கட்சியின் அறிவிப்புக்கு எதிராக அவர் பேசியுள்ளார். இது மக்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றுள்ளது.
அமைதி
தற்போது ''ஐபிஎல் போட்டி சென்னையில் நடக்க வேண்டுமா, வேண்டாமா என்பது என்பது பற்றி என்னவிதமான பார்வை வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் கண்டிப்பாக சட்ட ஒழுங்கு பாதுகாக்கப்பட வேண்டும். விளையாட்டு போட்டியை பாதியில் தடுப்பது நல்ல விஷயம் கிடையாது. அமைதியாக நடந்து வரும் காவிரி போராட்டத்தில் பிரச்சனை உருவாக்கி விட கூடாது.'' என்றுள்ளார்.


Click it and Unblock the Notifications












