முதல் இன்னிங்ஸ்
அதாவது புஜாரா (90), ஸ்ரேயாஸ் ஐயர் (86), அஸ்வின் (58) ஆகியோர் துண் போல நிலைத்து நின்று ஆடினார். ஆனால் அவர்களையெல்லாம் தாண்டி உமேஷ் யாதவின் மீது தான் ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது. இந்திய அணி 393 ரன்களுக்கு 9 விக்கெட்களை இழந்திருந்த போது 400 ரன்களை எப்படியாவது தாண்டிவிட வேண்டும் என ரசிகர்கள் யோசித்து வருகின்றனர்.
உமேஷ் யாதவின் அதிரடி
அதனை வெறும் இரண்டே பந்துகளில் முடித்துக்கொடுத்தார் உமேஷ் யாதவ். அஸ்வின் அவுட்டான உடனேயே வந்த அவர் முதல் பந்தை ஸ்ட்ரோக்காக விட்டார். அதற்கு அடுத்த 2வது பந்திலேயே மெஹிடி ஹாசன் வீசிய பந்தை பளார் என சிக்ஸருக்கு விளாசினார். அந்த ஷாட்டால் 101 மீட்டருக்கு பிரமாண்ட சிக்ஸருக்கு சென்றது. இதன்பின்னர் விக்கெட்கள் மறுமுணையில் சென்றுக்கொண்டே இருந்தது. ஆனால் அதற்கெல்லாம் உமேஷ் பயப்படவே இல்லை.
2வது சிக்ஸர் விளாசல்
மெஹிடி ஹாசன் வீசிய மற்றொரு ஓவரிலும் பந்தை சரியாக கணித்த அவர், மீண்டும் சிக்ஸருக்கு விளாசினார். இந்த முறையும் 100 மீட்டர்களுக்கு சென்றது. "ஏய் எப்புட்றா" என்பது போல இரு அணி வீரர்களுமே உமேஷ் யாதவை ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் பார்த்தனர். இதற்கு காரணம் பிட்ச் மிகவும் ஸ்லோவாக இருந்ததால் பேட்டிங் செய்யவே சிரமமாக இருந்தது. அப்போது முன்னணி பேட்ஸ்மேன்களே திணறினர். ஆனால் உமேஷ் மட்டும் 2 சிக்ஸர்களை விளாசினார்.
ரசிகர்கள் பாராட்டு
உமேஷின் அதிரடியால் இந்திய அணி 404 ரன்களை குவித்தது. இதனால் அவரை டி20 பேட்ஸ்மேனாக இனி பதவி உயர்வு கொடுங்கள் என ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர். கடினமான ஸ்கோரை நோக்கி களமிறங்கிய வங்கதேச அணி 133 ரன்களுக்கெல்லாம் 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.