
ஏன் போலீஸ்
மொத்தம் 3000 போலீஸ் இதில் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். இதில் மைதானத்திற்கு வெளியே 500க்கும் அதிகமான போலீஸ்கள் காவலில் இருப்பார்கள். உள்ளே 2000 போலீஸ்கள் வரை மக்களை சுற்றி இருப்பார்கள். 500 பேர் வீரர்களுடன் பெவிலியனில் பாதுகாப்பிற்காக இருப்பார்கள். 500 போலீஸ்கள் பவுண்டரி லைனுக்கு அருகில், ரசிகர்கள் மைதானத்திற்குள் செல்லாத வகையில் காவல் காப்பார்கள்.

ஏன் வாட்டர் கேன்
அதே போல் வாட்டர் கேன் தடை செய்யப்பட்டதற்கு காரணம் சொல்லப்பட்டுள்ளது. போட்டியின் போது, வீரர்கள் மீது ரசிகர்கள் பாட்டில்களை தூக்கி எறிய கூடாது என்பதற்காக இப்படி சட்டம் விதித்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு இது போல வீரர்கள் மீது பாட்டில் வீசும் சம்பவங்கள் அதிகமாக நடந்து இருக்கிறது. ஆனால் உள்ளே பாக்கெட் தண்ணீர் வழங்கப்படும்.

பெயிண்ட் அடிக்க முடியாது
மைதானத்திற்குள் சென்ற பின் கூட ரசிகர்கள் எந்த விதமான பெயிண்ட்டும் அடிக்க முடியாது. முகத்தில் ஐபிஎல் போட்டிக்கு எதிராக வரைய முடியாது. மேலும் ஐபிஎல் போட்டிக்கு எதிராக செய்யப்படும் கோஷங்கள் டீவியில் காட்டப்படாது என்றும் கூறப்படுகிறது.

போன் ஏன் அனுமதி இல்லை
போன் அனுமதிக்காததற்கு சில காரணங்கள் சொல்லப்பட்டுள்ளது. உள்ளே இருந்து கொண்டு ரசிகர்கள் வெளியே உள்ளவர்களுக்கு தகவல் தெரிவிக்க கூடாது, மக்களை போராட்டம் செய்ய சமூக வலைத்தளம் மூலம் அழைக்க கூடாது, வீரர்களை புகைப்படம் எடுத்து திட்ட கூடாது என்று நிறைய விஷயங்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











