ஹைதராபாத், சிஎஸ்கேவுக்கு சுலபம்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9 ஆட்டங்களில் 6ல் வென்று 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அடுத்துள்ள 5 ஆட்டங்களில் 2ல் வெற்றி பெற்றாலே பிளே ஆப் சுற்றுக்கு சுலபமாக முன்னேறிவிடும். சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதே நிலையில் உள்ளது. ஆனால் அந்த அணி 6 ஆட்டங்களில் 2ல் வென்றால் போதும். ஆனால் இவ்விரு அணிகளும் முதலிடத்தைப் பிடிக்கும் போட்டியில் உள்ளன.
அஸ்வின் அணிக்கு வாய்ப்பு
அஸ்வின் கேப்டனாக உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப், இந்த சீசனில் மிகவும் ஆச்சரியமூட்டும் அணியாக உள்ளது. இதுவரை 7ல் 5ல் வென்றுள்ளது. மீதமுள்ள 7ல் 3ல் வென்றாலே பிளே ஆப் சுற்று நிச்சயம். தினேஷ் கார்த்திக் கேப்டனாக உள்ள கொலகத்தா நைட் ரைடர்ஸ் அணி 9ல் 5ல் வென்றுள்ளது. மீதமுள்ள 5ல் நான்கில் வென்றாலே பிளே ஆப் சுற்று கன்பர்ம் ஆகிவிடும்.
பெங்களூர், டெல்லிக்கு சிரமம்
விராட் கோஹ்லி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 8ல் 3ல் வென்றுள்ளது. மீதமுள்ள 6ல் 5ல் வென்றால்தான் பிளே ஆப் கனவு பலிக்கும். இளம் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி திடீர் எழுச்சி பெற்று 9ல் 3ல் வென்றுள்ளது. அடுத்து விளையாடும் 5 ஆட்டங்களிலும் வென்றால் தான் பிளே ஆப் சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற முடியும்.
2015 ரிப்பீட்டு ஆகுமா
நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் 8ல் 2ல் மட்டுமே வென்று கடைசி இடத்தில் உள்ளது. மீதமுள்ள 6 ஆட்டங்களிலும் வென்றால் பிளே ஆப் சுற்று சாத்தியம். 2015லும் இதுபோல் கடைசி இடத்தில் இருந்து முன்னேறி கோப்பையை வென்றது. அஜிங்யா ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8ல் 3ல் வென்றுள்ளது. மீதமுள்ள 6ல் 5ல் வென்றால் பிளே ஆப் வாய்ப்பு உள்ளது.
தற்போதைய நிலையில் சிஎஸ்கே, ஹைதராபாத் அணிகளுக்கு கிட்டத்தட்ட ரூட் கிளியர். பஞ்சாப் அணி ஆர்ஏசியில் உள்ளது. அடுத்தடுத்த ஆட்டங்களின் முடிவுகளில்தான் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போகும் அணிகள் எவை என்பது நிச்சயமாகும்.