ஸ்பெஷல் நாடு
இந்நிலையில் ஜிம்பாப்வே நாட்டுடனான தனது நெருக்கம் குறித்து மனம் திறந்துள்ளார் டோணி. தனக்கு இது ஸ்பெஷல் நாடு என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார். இதற்கு காரணம் உள்ளது.
இந்திய ஏ அணி
"இந்திய அணியில் இடம் பிடிக்கும் முன்பு, 2004ல் ஜிம்பாப்வேயில் இந்தி ஏ அணியின் சுற்றுப்பயணத்தில் நானும் இடம்பெற்றிருந்தேன். இங்குதான் நான் பிரபலமாகி இந்திய அணியில் இடம் பிடித்தேன்" என்று டோணி கூறியுள்ளார்.
வாழ்க்கையை மாற்றியதாம்
இந்திய அணியில் இடம் பிடிக்க காரணமாக இருந்ததால் ஜிம்பாப்வே அவரது வாழ்க்கையை மாற்றிப்போட்ட இடம் என்று புகழாரம் சூட்டியுள்ளார். ஜிம்பாப்வே வரும்போதெல்லாம் நான் மிகவும் என்ஜாய் செய்கிறேன். இது எனக்கு 3வது டூர் என்றும் டோணி தெரிவித்தார்.
சதங்கள்
டோணி, பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிராக அடுத்தடுத்த போட்டிகளில் சதம் விளாசியது 2004ம் ஆண்டு ஜிம்பாப்வேயில் நடந்த போட்டியில்தான். இதுதான் இந்திய அணியில் டோணி நுழைய வாயில் கதவை திறந்து விட்டது.