பிரேசில் தோல்வி
அதேபோல் கோப்பையை வெல்லும் அணி என்று எதிர்பார்க்கப்பட்ட பிரேசில் மற்றும் இங்கிலாந்து அணிகள் காலிறுதி சுற்றோடு வெளியேறின. குறிப்பாக பிரேசில் அணி பெனால்டி ஷூட் அவுட் முறையில் குரோஷியாவிடம் தோல்வியடைந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே ஃபிஃபா உலகக்கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்கா நாடு என்ற சாதனையை மொராக்கோ படைத்துள்ளது.
ரொனால்டோ கருத்து
இந்த நிலையில் பிரேசில் அணியின் தோல்வி குறித்து முன்னாள் ஜாம்பவான் ரொனால்டோ கருத்து தெரிவித்துள்ளார். 2002ம் ஆண்டு பிரேசில் அணி உலகக்கோப்பையை வெல்வதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர் ரொனால்டோ. பிரேசில் தோல்வி குறித்து ரொனால்டோ கூறுகையில், பிரேசில் அணி காலிறுதி சுற்றோடு வெளியேறியது அதிர்ச்சியாகவே இருக்கிறது. அதேபோல் அர்ஜென்டினா அணி அரையிறுதிக்கு முன்னேறியதும் அதிர்ச்சியாக உள்ளது
அர்ஜென்டினா அணி
ஏனென்றால் அர்ஜென்டினா அணி இன்னும் ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஆட்டத்தை விளையாடவில்லை. ஆனால் கனவுகளை சுமந்து விளையாடி வருகின்றனர். இதயத்தை ஆட்டத்தில் வைத்து விளையாடுகின்றனர். அதேபோல் லயோனல் மெஸ்ஸி அனைத்து ஆட்டத்திலும் தீர்க்கமாக ஆடுகிறார். அதேபோல் அர்ஜென்டினா அணி வெற்றிபெற்றால், நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று சொல்வது பொய் தான். அர்ஜென்டினா கோப்பையை வெல்வது எனக்கு சோகம்தான் என்று தெரிவித்துள்ளார்.
அடுத்த பயிற்சியாளர்?
தொடர்ந்து பிரேசில் அணியின் பயிற்சியாளர் டைட் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பயிற்சியாளாராக யார் வருவார் என்ற கேள்விக்கு, பிரேசில் அணிக்கு வெளிநாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்பட்டால் கூட நான் வரவேற்பேன். ஆனால் பெல் கார்டியாலோ, கார்லோ அன்செலோட்டி அல்லது ஜோஸ் முரின்னோ உள்ளிட்டோர் பயிற்சியாளராக வர வேண்டும் என்பது என் ஆசை. ஆனால் அதனை முடிவு செய்யும் இடத்தில் நான் இல்லை என்று தெரிவித்தார்.