புனே சிட்டிக்கு ரூட் கிளியர்
அரை இறுதிக்கு நுழைவதற்கான அதிக வாய்ப்பு உள்ள அணிகளில் புனே சிட்டி முதலிடத்தில் உள்ளது. இதுவரை விளையாடியுள்ள 16 போட்டிகளில், 29 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அடுத்து விளையாட உள்ள இரண்டு ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி, ஒன்றில் டிரா செய்தாலே, அரை இறுதிக்கு நுழைந்துவிடும். இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தாலும், மற்ற அணிகளின் ஆட்டத்தைப் பொருத்து, அரை இறுதிக்கு நுழைவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதிக கோல் வித்தியாசம் உள்ளது புனே சிட்டிக்கு மிகப் பெரிய பலமாகும். அடுத்ததாக, எப்சி கோவா மற்றும் டெல்லி டைனமோஸ் அணிகளுடன் புனே சிட்டி விளையாட உள்ளது.
டோணியின் டீமுக்கு வாய்ப்பு உள்ளது
கேப்டன் கூல் மகேந்திர சிங் டோணியின் சென்னையின் எப்சி அணிக்கு, அரை இறுதிக்கு நுழைய மிகப் பெரிய வாய்ப்பு உள்ளது.
முன்னாள் சாம்பியனான சென்னையின் எப்சி, 28 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்து விளையாட உள்ள ஆட்டங்களில் மிகவும் வலுவான கேரளா பிளாஸ்ட்ர்ஸ், மும்பை சிட்டி எப்சியை சந்திக்க உள்ளது. இந்த ஆட்டங்களில் வென்றால், அரை இறுதி வாய்ப்பில் சந்தேகமே இல்லை. ஒன்றில் வென்றாலும் அல்லது இரண்டிலும் டிரா செய்தாலும், அல்லது ஒன்றில் டிரா செய்தாலும் மற்ற அணிகளின் ஆட்டங்களைப் பொருத்து, அரை இறுதிக்கு வாய்ப்பு உள்ளது.
தயாராகும் ஜாம்ஷெட்பூர்
தற்போது, 26 புள்ளிகளும், புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர் அணி, புனே சிட்டி மற்றும் சென்னையின் எப்சி அணிகளுக்கு கடும் சவாலாக உள்ளது. அதே போல் 24 புள்ளிகளுடன் உள்ள கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கும் அரை இறுதிக்கு நுழையும் வாய்ப்பு உள்ளது. மற்றொரு முக்கிய சவால், கோவா எப்சி அணியிடம் இருந்து வருகிறது. 20 புள்ளிகளுடன் உள்ள அந்த அணி, அடுத்து நான்கு ஆட்டடங்களில் விளையாட உள்ளது.
புள்ளிப் பட்டியலில் 7வது இடம்
20 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் 7வது இடத்தில் உள்ள மும்பை சிட்டி எப்சி அணி அடுத்து 3 ஆட்டங்களில் விளையாட உள்ளது. புள்ளிப் பட்டியலில் 4 முதல் 7வது இடத்தில் உள்ள ஜாம்ஷெட்பூர், கேரளா பிளாஸ்டர்ஸ், கோவா எப்சி, மும்பை சிட்டி எப்சி ஆகிய அணிகள் பங்கேற்கும் அடுத்த லீக் ஆட்டங்களின் முடிவிலேயே, அரை இறுதிக்கு நுழையப் போவது யார் என்பது தெரியும்.