டெல்லி: அடுத்த மாதம் நடக்கும் காமன்வெல்த் போட்டியில் மீண்டும் தங்கம் வென்று வருவோம் என, இந்திய மகளிர் அணியின் கேப்டன் ராணி ராம்பால் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காமன்வெல்த் போட்டிகள், ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் அடுத்த மாதம் 4ம் தேதி துவங்குகிறது. இதில் மகளிர் ஹாக்கியில், இந்தியா, ஏ பிரிவில், மலேசியா, வேல்ஸ், இங்கிலாந்து, தென்கொரியா அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. 5ம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் வேல்ஸ் அணியை இந்திய அணி சந்திக்க உள்ளது.