
74 ரன்களில் சுருண்டது
முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் நாக்பூர் மைதானத்தில் விதர்பா, குஜராத் அணிகள் ரஞ்சி போட்டிகள் நடைபெற்ற ஆட்டம் தான் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், டாஸ் வென்று விதர்பா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதில் பைசல் டக் அவுட்டாகி வெளியேற,அதிகபட்சமாக சஞ்சய் ரகுநாத் மட்டும் 33 ரன்கள் எடுக்க மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, அந்த அணி 74 ரன்களில் சுருண்டது.

73 ரன்கள் இலக்கு
இதில் குஜராத் வேகப்பந்துவீச்சாளர்கள் தேஜாஸ், கஜா ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து குஜராத் அணி முதல் இன்னிங்சில் 256 ரன்கள் அடித்துள்ளது. இதனையடுத்து 182 ரன்கள் பின்தங்கிய நிலையில், 2வது இன்னிங்சில் களமிறங்கிய விதர்பா அணி 254 ரன்கள் எடுத்துள்ளது. இதனையடுத்து கடைசி இன்னிங்சில் 73 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்கியது.

54 ரன்களில் சுருண்டது
இதில் விதர்பா அணியின் சுழற்பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாத குஜராத் வீரர்கள் 54 ரன்களில் சுருண்டு தோல்வியை தழுவினர். இதன் மூலம் இந்த ஆடுகளத்தில் முதலில் வேகப்பந்துவீச்சும், பிறகு சுழற்பந்துவீச்சும் எடுக்கும் என்று தெரியவந்துள்ளது.இப்படி மைதானம் கணிக்க முடியாத அளவுக்கு இருப்பதால், இங்கு இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் முதல் டெஸ்டில் விளையாடுகிறது.

இரு அணிக்கும் ஆபத்து
இதன் காரணமக இரண்ட அணிகளுக்கும் ஆபத்து இருப்பதாகவும், போட்டி 3 நாட்களில் முடிந்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு ல்லை என்றும் கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகின்றனர். இப்படி தான் 2017ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவை சுருட்ட வேண்டும் என்று விரிக்கப்பட்ட வலையில் இந்தியாவே சிக்கி சின்னாப்பினனமாக ஆனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











