மாஸ்டர் பிளான் ரெடி.. சென்னை அணி எடுக்க போகும் வீரர்கள்!
சென்னை: ஐபிஎல் ஏலம் இன்று மற்றும் நாளை பெங்களூரில் நடக்கிறது. அனைத்து அணிகளும் எந்த வீரர்களை எடுக்க வேண்டும் என்று உத்தேச கணக்கு ஏற்கனவே போட்டுவிட்டது.
இந்த நிலையில் சென்னை அணியும் எந்த வீரர்களை எடுக்க வேண்டும் முடிவு செய்து வைத்து இருக்கிறது. ஏற்கனவே சென்னை அணிக்கு டோணி, ஜடேஜா, ரெய்னா ஆகியோர் திரும்பி இருக்கிறார்கள்.
இதனால் சென்னை அணிக்கு வர போகும் மீதம் இருக்கும் வீரர்கள் யார் என்று உத்தேச கணக்கு ஒன்று வெளியிடப்பட்டு இருக்கிறது.

இரண்டு வீரர்கள்
சென்னை அணிக்கு இன்னும் இரண்டு ஆர்டிஎம் மீதம் இருக்கிறது. இதை வைத்து பழைய சிஎஸ்கேயியன்ஸ் இருவரை மீண்டும் எடுக்கலாம். இந்த வாய்ப்பை சென்னை அணி மிக முக்கியமான கட்டத்தில் மட்டுமே பயன்படுத்தும் என்று கூறப்பட்டு இருக்கிறது.

ஸ்பின் தமிழன்
இதில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் கண்டிப்பாக அஸ்வின் அணிக்கு திரும்புவார் என்பதுதான். இரண்டு ஆர்டிஎம்களில் அஸ்வினை ஒரு ஆர்டிஎம் பயன்படுத்தி எடுக்க இருக்கிறார்கள். டோணி ஏற்கனவே இதற்கான வாக்குறுதியை கொடுத்து விட்டார்.

திட்டம் என்ன
சென்னை அணியின் திட்டத்தின் படி இன்னும் ஸ்பின் பவுலர் எடுக்கப்பட உள்ளார். புதிய வேகப்பந்து வீச்சாளர்கள் எடுக்கப்பட உள்ளார்கள். அதே போல் மிடில் ஆர்டரில் ரெய்னாவிற்கு உதவியாக இருக்க ஒரு வீரர் தேர்வு செய்யப்படலாம். பிராவோ, மெக்குலம் இருவரில் யாரையாவது ஆர்டிஎம் மூலம் எடுக்க வாய்ப்பு இருக்கிறது.

உத்தேச லிஸ்ட்
சென்னை அணியின் உத்தேச லிஸ்ட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி பிராவோ, மெக்குலம், டோணி, ரெய்னா, அஸ்வின், ஜடேஜா, முரளி விஜய், ரஷீத் கான், இவின் லூயிஸ், வாஷிங்க்டன் சுந்தர், ஆண்ட்ரு டை, இன்னும் புதிய வீரர்கள் யாரவது எடுக்கப்படலாம்.


Click it and Unblock the Notifications