மும்பை: ஐபிஎல் சீசன் 11 துவங்கியுள்ளது. இதையும் சேர்த்து, ஒவ்வொரு சீசனின் முதல் ஆட்டத்தில் அதிக முறை விளையாடியப் பெருமையை ரோஹித் சர்மா மற்றும் ஹர்பஜன் புரிந்துள்ளனர். இருவரும் 6வது முறையாக சீசனின் முதல் ஆட்டத்தில் பங்கேற்கின்றனர். டோணி, போலார்டு, ராயுடு ஆகியோர் 5வது முறையாக முதல் ஆட்டத்தில் விளையாடுகின்றனர்.
ஐபிஎல் எனப்படும் இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டியின் 11வது சீசன் துவங்கியுள்ளது. மொத்தம் 8 அணிகள், 51 நாட்கள் விளையாட உள்ளன. ஒவ்வொரு அணியும், தலா 14 போட்டிகளில் விளையாட உள்ளன. அதில், ஒவ்வொரு அணியுடனும் சொந்த மண்ணிலும், எதிர் அணியின் மண்ணிலும் விளையாட உள்ளன.
இந்த சீசனையும் சேர்த்து, ஒவ்வொரு சீசனின் முதல் ஆட்டத்தில் அதிக முறை விளையாடியப் பெருமையை மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஹர்பஜன் புரிந்துள்ளனர். இருவரும் 6வது முறையாக சீசனின் முதல் ஆட்டத்தில் பங்கேற்கின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, போலர்டு, ராயுடு ஆகியோர் 5வது முறையாக முதல் ஆட்டத்தில் விளையாடுகின்றனர்.