உம்ரானின் பவுலிங்
முதல் போட்டியில் 2 விக்கெட்களை கைப்பற்றிய உம்ரான் மாலிக், 2வது போட்டியில் 3 விக்கெட்களை கைப்பற்றி அசத்தினார். ஆனால் 48 ரன்களை தாராளமாக வாரி வழங்கியிருந்தார். உம்ரானின் வேகத்தை சரியாக பயன்படுத்திக்கொண்ட எதிரணி பேட்ஸ்மேன்கள் சுலபமாக சிக்ஸர்களாக மாற்றினார்.
சல்மான் பட் அட்வைஸ்
இந்நிலையில் இதுகுறித்து பாக். முன்னாள் வீரர் சல்மான் பட் அறிவுரை கூறியுள்ளார். அதில், அனுபவம் பெற்றால் தான் உம்ரான் சரி ஆவார். அதனால் தான் ரன்களை கசியவிட்டார். எதிரணி வீரர்கள் அனுபவமிக்கவர்கள் என்பது தான் பிரச்சினையே. அவர் என்ன பந்துவீச்சப்போகிறார் என்பதை சுலபமாக கணித்துவிடுகின்றனர். அது யார்க்கராக இருந்தாலும் சரி, ஸ்லோயராக இருந்தாலும் சரி கணிக்க முடிகிறது.
தப்பு கணக்கு
பேட்ஸ்மேன்கள் ஸ்டம்பில் இருந்து விலகி நிற்பது, இவர் போல்ட் ஆக்குவதற்கு என உம்ரான் நினைத்துக்கொள்கிறார். எப்போதும் உள்நோக்கியே யார்க்கர் வீசக்கூடாது. அவுட் சைட் தி ஆஃப் திசையிலும் யார்க்கர்களை வீச வேண்டும். நிறைய வேரியேஷன்களை முயன்று பார்க்கும் போதுதான் அனுபவம் வரும். அப்போது தான் வெற்றிகரமாக சுற்ற முடியும் என சல்மான் பட் கூறியுள்ளார்.
சிறப்பான பங்களிப்பு
இந்த இரண்டு போட்டிகளிலுமே இந்திய அணிக்காக சிறப்பாக பந்துவீசியவர்கள் உம்ரான் மற்றும் ஷிவம் மாவி தான். ஏனென்றால் சற்று அனுபவம் உள்ள அர்ஷ்தீப் சிங் மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகிய இருவருமே மோசமாக சொதப்பினர். இவர்களால் தான் தோல்விக்கு அருகே இந்தியா சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.