கை தூக்கினார்
பள்ளியில் எப்படி படிக்க கூடிய பிள்ளைகள் அனைத்திற்கும் கை தூக்குவார்களோ அதேபோல் ப்ரீத்தி ஜிந்தா அனைத்திற்கும் கை தூக்கினார். வீரரை எடுக்கிறோமோ இல்லையோ கையை தூக்கி வைப்போம் என்று எல்லோரையும் கேட்டார்கள். பல அணிகளுக்கு இது தொல்லையாக இருந்தது.
அஸ்வினை எடுத்தார்
நேற்று இவர் செய்த செயலில் மிகவும் சிறப்பான சம்பவம் இதுதான். அஸ்வினை கஷ்டப்பட்டு 9 கோடி கொடுத்து அசால்ட்டாக எடுத்தார். சென்னை ரசிகர்களுக்கு இதன் காரணமாகவே இவர் மீது கோபம் இருக்கிறது. பஞ்சாப்பை ஆளப்போறான் தமிழன் என்று தற்போது சமாதானம் ஆகி இருக்கிறார்கள்.
|
வலி
ப்ரீத்தி ஜிந்தாவிற்கு கடந்த இரண்டு நாட்களாக பல் வலி இருக்கிறது. ஆனாலும் அதை தாங்கிக் கொண்டு இவர் ஏலம் எடுக்க வந்துள்ளார். முக்கியமாக தன்னை சுற்றி எப்போதும் கேமரா சரியாக இருக்கும்படி கவனமாக பார்த்துக் கொண்டது அப்பட்டமாக தெரிந்தது.
ஆட்டம் இருக்கு
இன்னும் இவரின் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிடம் 21.90 கோடி பணம் இருக்கிறது. பல முக்கியமான வீரர்களை ஏற்கனவே இவர் எடுத்துவிட்டார். இன்னும் ஒரு ஆர்டிஎம் வேறு மீதம் இருக்கிறது. இதனால் கண்டிப்பாக இன்றும் இவர் கெத்து ஆட்டம் ஆடுவார்.