152 போட்டிகளில் கேப்டன்
32 வயதான டோணி, 152 ஒரு நாள் போட்டிகளில் கேப்டனாக பணியாற்றியுள்ளார். மொத்தம் 5278 ரன்களையும் அவர் குவித்துள்ளார். இதற்கு முன்பு அஸாருதீன் 174 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 5239 ரன்களைக் குவித்திருந்ததே அதிகபட்சமாக இருந்தது.
உலக அளவில் 5வது இடத்தில்
உலக அளவில் கேப்டனாக இருந்து அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையில் 5வது இடத்தில் இருக்கிறார் டோணி. முதலிடத்தில் முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பான்டிங் இருக்கிறார். அவர் 230 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்து 8497 ரன்களைச் சேர்த்துள்ளார்.
3வது இடத்தில் கங்குலி
இந்திய வீரர்களில் கங்குலி 3வது இடத்திலும், டிராவிட் 4வது இடத்திலும் உள்ளனர்.
சச்சினுக்கு 5வது இடம்
சச்சின் டெண்டுல்கர் 5வது இடத்தில் இருக்கிறார். இவர் 73 போட்டிகளுக்குக் கேப்டனாக இருந்தவர். 2454 ரன்களைக் கேப்டனாக இருந்து எடுத்தவர்.
ராசியான கேப்டன் டோணி
ஏற்கனவே இந்திய அணியின் ராசியான கேப்டனாக இருந்து வந்த அஸாருதீனை ஓவர்டேக் செய்து சாதனை படைத்தவர் டோணி என்பது நினைவிருக்கலாம். அஸாருக்குப் பிறகு இந்தியாவுக்கு அதிக வெற்றிகளைத் தேடிக் கொடுத்துள்ளார் டோணி.