சீனியர்களுக்கு ஓய்வு
நியூசிலாந்து தொடருக்கு பின்னர் பணிச்சுமை காரணமாக ஓய்வில் இருந்து ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற வீரர்கள் மீண்டும் அணிக்கு கம்பேக் தந்துள்ளனர். ஆனால் நீண்ட நாட்களாக ஓய்வில் உள்ள ஜஸ்பிரித் பும்ராவின் நிலைமை தான் என்ன ஆனது என்று புரியாமல் ரசிகர்கள் குழம்பியிருந்தனர்.
நீண்ட ஓய்வு
கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தின் போது முதுகில் ஏற்பட்ட காயத்தினால் பாதிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ரா பல்வேறு முக்கிய தொடர்களை தவறவிட்டார். கடந்த இலங்கை தொடரில் கம்பேக் தருகிறார் என அறிவிக்கப்பட்ட சூழலில் கடைசி நேரத்தில் மீண்டும் முதுகுவலி பிரச்சினை எனக்கூறி வெளியேறினார். ஆஸ்திரேலியாவுடனான போலவே முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் அவரின் பெயர் இடம் பெறவில்லை.
பும்ரா ரிட்டர்ன்ஸ்
இந்நிலையில் பும்ராவின் கம்பேக் குறித்து புது தகவல் வெளியிடப்பட்டுள்ளது. முதுகு வலியால் இத்தனை நாட்களாக உடற்பயிற்சிகளை மட்டுமே செய்துக்கொண்டிருந்த அவர், தற்போது பந்துவீச தொடங்கிவிட்டார். தேசிய கிரிக்கெட் அகாடமியில் தீவிர வலைபயிற்சியை செய்துள்ளார். அப்போது அவருக்கு எந்தவொரு சிரமும் ஏற்படவில்லை எனக்கூறப்பட்டுள்ளது.
இந்திய அணி அறிவிப்பு
3வது மற்றும் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இன்னும் அறிவிக்கப்படாமல் தான் உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 1ம் தேதி முதல் தொடங்குகின்றன. எனவே இன்னும் ஒரு மாத காலம் அவகாசம் இருப்பதால் அதற்குள் ஜஸ்பிரித் பும்ரா நன்றாக தயாரகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு உடற்தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டு, முழு ஃபார்முடன் களமிறக்கப்படுவார்.