முன்னெச்சரிக்கை
ரோஹித் சர்மா காயத்தில் இருந்து ஓரளவு மீண்டு விட்டதாக கூறப்படுகிறது. எனினும், முன்னெச்சரிக்கையாக ரோஹித் சர்மாவிற்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கீரான் பொல்லார்டு கேப்டன் பொறுப்பை ஏற்றார்.
முதல் முறையாக ஓய்வு
ரோஹித் சர்மா 2011 முதல் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடி வருகிறார். அந்த அணிக்காக இதுவரை ஒரு போட்டி விடாமல் ஐபிஎல் தொடரில் ஆடி வந்த ரோஹித் சர்மா முதல் முறையாக ஒரு போட்டியில் ஓய்வு எடுத்துள்ளார்.
கடைசியாக..
2011க்கு முன்பு ரோஹித் சர்மா டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஆடி வந்தார். அப்போது 2008ஆம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான போட்டியில் ரோஹித்துக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு போட்டி விடாமல் ஐபிஎல் தொடரில் ஆடி வந்தார் ரோஹித்.
11 ஆண்டுகளுக்கு பின்
சுமார் 11 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் ஒரு போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் இதுவரை 165 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ளார். அதில் டெக்கான் அணிக்காக 32 போட்டிகளிலும், மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 133 போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார் ரோஹித் சர்மா.
இரண்டாம் இடம்
அதே போல ஒரே அணிக்காக தொடர்ந்து அதிக போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்த இடத்தில் ரோஹித் இருக்கிறார். சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து 134 போட்டிகளில் ஆடியிருந்தார். ரோஹித் மும்பை அணிக்காக 133 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று, அவருக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.